மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில் 4 ஆசிரியை இடமாற்றம்; தொடரும் விசாரணை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார விவகாரத்தில், கல்வி அதிகாரிகள் குழு விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் பணியாற்றிய மற்ற நான்கு ஆசிரியைகளும் இட-மாற்றம் செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்த, 13 வயது மாணவியை, அதே பள்ளியின், 3 ஆசிரியர்கள், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களை, பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அச்சம்பவத்தால் கடந்த, 2 நாட்களாக பள்ளி மூடப்பட்ட நிலையில், நேற்று முன்-தினம், பள்ளி மீண்டும் திறந்தும், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுத்து விட்டனர். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, கல்வி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 9 கோரிக்கைகளை மாணவர்களின் பெற்றோர் முன்வைத்து, கலெக்-டரை சந்திக்க கேட்டனர்.அதன்படி நேற்று மதியம், மாணவியின் உறவினர்கள் உட்பட, 23 பேர் கலெக்டர் தினேஷ்குமாரை சந்தித்து பேசினர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு, உயர்கல்வி சலுகை, பள்-ளிக்கு ஆசிரியைகள் மட்டுமே நியமனம், கண்காணிப்பு கேமரா, சுற்றுச்சுவர் மற்றும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வலியுறுத்தினர்.இதனிடையே நேற்று மூன்றாவது நாளாக அரசு நடுநிலைப்பள்-ளியில், அரசு துவக்கப்பள்ளிகளின் இணை இயக்குனர் சாந்தி தலைமையில், சி.இ.ஓ., முனிராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தாம்சன், தாசில்தார் சத்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் விசாரணை நடத்-தினர். கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'மாணவி பாலியல் வன்கொ-டுமை தொடர்பாக, மூன்று ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்-டுள்ளனர். தலைமை ஆசிரியை விடுப்பில் உள்ளார். மற்ற நான்கு ஆசிரியைகளுக்கு வேறு பள்ளியில் மாற்றுப்பணி வழங்கி இட-மாற்றம் செய்யப்பட்டனர். இப்பள்ளிக்கு நாளை வேறு பள்ளிகளி-லிருந்து, ஏழு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்' என்-றனர்.