உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு இடங்களில் இருவர் மாயம்

வெவ்வேறு இடங்களில் இருவர் மாயம்

கிருஷ்ணகிரி, பாகலுார் அடுத்த சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சந்திரப்பா, 69, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும், குணமாகாத விரக்தியில் இருந்துள்ளார். கடந்த, 16ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது மகன் புகார் படி பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர். கல்லாவி அடுத்த பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் கலா, 55. கல்லாவில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்தார். கடந்த, 16ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது மகள் புகார் படி, கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ