வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: தமிழகத்தில், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை உடனே இயற்றக்கோரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஒருங்கிணைந்த மாவட்ட, வி.சி., கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் குபேந்திரன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.