பெல்ட் அறுந்து தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி, மகாராஷ்டிர மாநிலம், பிலாஸ்பூரை சேர்ந்தவர் மக்கான் சிங், 19. இவர், பர்கூர் அடுத்த சத்தலப்பள்ளியில் தங்கி ஒரு கிரானைட் கம்பெனியில் பணிபுரிந்தார். கடந்த, 18ல் பணியில் இருந்தபோது இயந்திரத்தின் பெல்ட் அறுந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில் இறந்தார். அவரின் சகோதரர் அளித்த புகார்படி, கந்திகுப்பம் போலீசார் இயந்திரங்களை முறையாக பராமரிக்காத கிரானைட் கம்பெனி மானேஜர் சரவணன்,32, மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.