உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர் நாள் கூட்டம் வரும் ஜூலை, 2ல், காணொலியில் நடக்கிறது. இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர் நாள் கூட்டம் வரும், ஜூலை 2, காலை, 11:00 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடக்க உள்ளது. அஞ்சலக ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது புகார்களை, தபாலில் அனுப்பலாம். மேலும், dokrishnagiri.indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி