ஆடு வளர்க்க செப்.25ல் வாங்க
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின்கீழ் ஆடு வளர்ப்பு, பண்ணை அமைக்க அரசு சான்றிதழுடன்கூடிய ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் செப்.25ல் நடக்கிறது. முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளோர் 0452 - 248 3903ல் தொடர்பு கொள்ளலாம் என மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.