உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆசிரியைகள் புகாரில் தாளாளர் தலைமையாசிரியை மீது வழக்கு

ஆசிரியைகள் புகாரில் தாளாளர் தலைமையாசிரியை மீது வழக்கு

மதுரை:மதுரை, நரிமேடு நேரு வித்யாசாலை ஆரம்பப்பள்ளி ஆசிரியை மெட்டில்டா ஜெபமணி. உபரி ஆசிரியர்கள் இருந்ததால் வண்டியூர் அரசு பள்ளியில் பணியாற்றிவிட்டு மீண்டும் நேரு பள்ளிக்கு திரும்பினார். அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, மொபைல் போனில் இருந்த அவரது பதிவுகளை காண்பித்து அவமானப்படுத்தியதாக தாளாளர் சேத் டேனிராஜ் பேசிங்கர் உட்பட 7 பேர் மீது நீதிமன்றம் உத்தரவுபடி தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மற்றொரு ஆசிரியை ரோசி ஞானகுமாரி. உடல்நிலை காரணமாக ஈட்டிய விடுப்பில் இருந்தார். வருமான வரி சான்றில் கையெழுத்திட வேண்டும் என அவரை பள்ளிக்கு வரவழைத்து தலைமையாசிரியைஹேமா அருளானந்தம் உட்பட 4 பேர், ரோசியின் மொபைல் போனை வாங்கி, அதில் உள்ள பதிவுகளை பொதுவெளியில் பகிர்ந்துவிடுவதாக மிரட்டியதாக நீதிமன்றம் உத்தரவுபடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ