தீப்பற்றிய மரங்கள்
சோழவந்தான், ஜூலை 23- தேனுார் கண்மாய் அருகே தனியார் உர நிறுவனத்தின் பின்புறம் கருவேல மரங்களில் தீப்பிடித்து அருகே செடி, கொடிகளில் பற்றி பரவியது. சோழவந்தான் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் விரைந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.