உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பல்திறன் போட்டிகள்

பல்திறன் போட்டிகள்

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு கணினி அறிவியல் துறை சார்பில் மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான பல்திறன் போட்டிகள் நடந்தன.கல்லுாரித் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறை தலைவர் தேவிகா வரவேற்றார்.பேராசிரியர் பால பிரியா அறிமுக உரையாற்றினார். நிதி இன்போடெக் சி.டி.ஓ. சீனிவாசன் பேசினார். 37 கல்லுாரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.அமெரிக்கன் கல்லுாரி முதல் பரிசை வென்றனர். பேராசிரியர் சந்தியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை