மேலும் செய்திகள்
சொந்தமுள்ள வாழ்க்கை - சொர்க்கத்துக்கு மேலே...
16-Feb-2025
பேரையூர்; பேரையூர் தாலுகா வன்னிவேலம்பட்டியில் ஒரு மாதமாக குடிநீர் வராததால் இப்பகுதி பொதுமக்கள் டி. கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அவர்கள் கூறியதாவது: வைகை கூட்டுக் குடிநீர் எங்கள் பகுதிக்கு வருகிறது. அதை விநியோகம் செய்யாமல் மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி உப்புநீரையும் கலந்து அவ்வப்போது சப்ளை செய்கின்றனர். எங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்றனர். ஒன்றிய அதிகாரிகள் 'இனி தண்ணீர் கலக்காமல் தருகிறோம்' என்று கூறியதால் கலைந்து சென்றனர்.
16-Feb-2025