பெண் கொலையில் மேலும் மூவர் கைது
மதுரை: கீரைத்துறை கண்ணன் 39. ராணுவவீரர். இவரது மனைவி திலகவதி 36. தகாத உறவால் ஆக.,6ல் கழுத்து நெரித்துக்கொலை செய்ததாக சகோதரர் தமிழ்ராஜ் 42, கைது செய்யப்பட்டார். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கண்ணன், திலகவதியின் சகோதரி தமிழ்ச்செல்வி 42, தமிழ்ராஜ்ஜின் மகன் கல்லுாரி மாணவரான அஜய்குமார் 21, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சிறை பணியாளர் பலி
மதுரை: மாகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் 55. மதுரை சிறையில் அமைச்சுப் பணியாளராக இருந்தார். நேற்றுமுன்தினம் சமயபுரம் கோயிலுக்கு சென்றுவிட்டு டூவீலரில் நத்தம் ரோட்டில் இரவு வந்தபோது கொடிமங்கலத்தில் வாகனம் ஒன்று மோதி இறந்தார். இவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டன. போலீசார் விசாரிக்கின்றனர். ஓய்வுபெற்ற ராணுவவீரர் மீது தாக்குதல்
மதுரை: தனிச்சியம் ராஜா 44. ஓய்வு பெற்ற ராணுவவீரர். இவர் பாஸ்கரன் என்பவருக்காக கருவேல மரங்களை அகற்றியபோது, அப்பகுதி தவமணி உள்ளிட்டோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தவமணி உட்பட 6 பேர் மீது வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்தில் வாலிபர் பலி
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் கரட்டு தெரு பாண்டி மகன் சிவக்குமார் 30. நேற்று முன்தினம் இரவு டூவீலரில் சிக்கந்தர் சாவடி சென்று திரும்பினார். அலங்காநல்லுார் நோக்கி வந்தபோது பூதக்குடி பிரிவு அருகே நிலைத் தடுமாறி முன்னால் சென்ற லாரியில் மோதி இறந்தார்.மாணவர் தற்கொலை
வாடிப்பட்டி: பரவை பவர் ஹவுஸ் நாகவள்ளி, மின்வாரிய கணக்கர். இவரது மகன் கவியரசு 17. மதுரை தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். ஆக.,7ல் விஷம் சாப்பிட்டார். கோவையில் சிகிச்சை பெற்றவர் இறந்தார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.