உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.18 லட்சம் ஏலம் போனது பஞ்சாமிர்தம் விற்பனை திருப்பரங்குன்றம் கோயிலில்

ரூ.18 லட்சம் ஏலம் போனது பஞ்சாமிர்தம் விற்பனை திருப்பரங்குன்றம் கோயிலில்

திருப்பரங்குன்றம், ; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்தாண்டு பஞ்சாமிர்தம் விற்பனை ரூ. 18 லட்சத்து 18 ஆயிரத்துக்கு ஏலம் போனது.இக்கோயிலில் 2024 ஜூலை 1முதல் 2025 ஜூன் 30 வரையான சில்லரை குத்தகை உரிம பொது ஏலம் நேற்று அழகர் கோவில் கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் கலைவாணன், திருப்பரங்குன்றம் கோயில் துணை கமிஷனர் சுரேஷ் முன்னிலையில் நடந்தது. 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில் பஞ்சாமிர்தம்மற்றும் விபூதி விற்பனை ரூ. 18 லட்சத்து 18 ஆயிரத்துக்கும், முடி சேகரிக்கும் உரிமம் ரூ. 4.25 லட்சம், உயிர் பிராணிகளை சேகரிக்கும் உரிமம்ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 500, சரவணப்பொய்கையில் பரிகாரம், பால்குடம், காவடி செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூல் உரிமம் ரூ. 95 ஆயிரம்.மலைமேல் காசிவிஸ்வநாதர் கோயிலில் கடைவைக்கும் உரிமம் ரூ. 3 லட்சத்து 2 ஆயிரத்து 500, பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் தேங்காய்பழம், பூஜைப்பொருள் விற்பனை செய்யும் உரிமம் ரூ. 1 லட்சத்து77 ஆயிரம்,மலைக்குப்பின்புறம் பூங்காவிற்குள் கேப்டீரியா கேன்டீன் நடத்தும் உரிமம் கடைஎண் 1க்கு, ரூ 3.51லட்சம்,கடை எண் 2க்கு, ரூ. 4.82 லட்சம்,. கடைஎண் 3க்கு ரூ. 5.21 லட்சம், கடைஎண் 4க்கு, ரூ. 5. 89 ஆயிரம், கிரிவீதி புளியமரங்கள், பனைமரங்களின் மேல்பலன் அனுபவிக்கும் உரிமம் ரூ. 9 ஆயிரத்து 500க்கு ஏலம் போனது. பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை கடந்தாண்டு ரூ.10.55 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்தாண்டு அதிக பட்சம் ரூ. 18.18 லட்சம் ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி