உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அதே இடம்... அதே அறை...: மீண்டும் கம்பீர கட்டடத்திற்கு இடம் மாறுகிறார் கலெக்டர்

அதே இடம்... அதே அறை...: மீண்டும் கம்பீர கட்டடத்திற்கு இடம் மாறுகிறார் கலெக்டர்

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டர், டி.ஆர்.ஓ., அறைகள் உட்பட சில பிரிவுகளை பழைய கட்டடத்திற்கே இடமாற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலெக்டர் சங்கீதா ஆய்வு நடத்தினார்.கலெக்டர் அலுவலகம் ஏழு ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இந்த வளாகத்தில் வடக்கு, தெற்கு தாலுகா அலுவலகங்கள், தீயணைப்பு துறை, மருத்துவத்துறையின் மருந்துக் கிடங்கு, அரசு வாகனங்களை பழுதுநீக்கும் போக்குவரத்து பணிமனை உட்பட வேறு அலுவலகங்களும் உள்ளன.வளாகத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் பழைய கட்டடம் நுாறாண்டுகளை தாண்டி பயன்பாட்டில் உள்ளது. பல துறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்காக 4 ஆண்டுகளுக்கு முன் புதிய ஒருங்கிணைந்த கட்டடம் கட்டப்பட்டது. எனவே பழைய கட்டடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பது என முடிவெடுத்தனர். பின்னர் வெளியிடங்களில் வாடகைக்கு செயல்படும் சில துறைகளை பழைய கட்டடத்திற்கு கொண்டு வரலாம் என்று முடிவெடுத்தனர். இதையடுத்து பழைய கட்டடத்தில் புதுப்பித்தல் பணிகள் நடந்தன. சில மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டு, மீண்டும் பணிகள் துவங்கி நடக்கின்றன.இதையடுத்து பழைய கட்டடத்தை கலெக்டர் சங்கீதா நேற்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆய்வு நடத்தினார். இக்கட்டடத்திலேயே மீண்டும் கலெக்டர், டி.ஆர்.ஓ., அறைகளையும், சில பிரிவுகளையும் இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பழைய, புதிய கட்டடங்களுக்கு இடையே இணைப்பு பாலம் ஒன்றை அமைப்பது குறித்தும் ஆலோசனை நடந்தது. புதிய கட்டடத்தின் முதல்தளம் மேற்கு பகுதி போர்டிகோவில் இருந்து பழைய கட்டட கூட்ட அரங்கு அருகே இணைக்கலாமா என ஆலோசனை நடத்தினர். மேலும் பின்புறம் மருத்துவ கல்லுாரி பிரதான வாயில் எதிரே பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் கேட்டை திறப்பது, அவ்வழியாக மருந்து கிடங்கு, தீயணைப்பு நிலையம், பணிமனைக்கு வரும் வாகனங்களை அனுமதிப்பது எனவும் ஆலோசனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை