உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பல்கலை ஊழியர் விபத்தில் பலி

பல்கலை ஊழியர் விபத்தில் பலி

திருமங்கலம்: செக்கானுாரணி அருகே கண்ணனுாரை சேர்ந்த ரவி 52. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு வேலை முடிந்து டூவீலரில்(ஹெல்மெட் அணிந்திருந்தார்) ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விக்கிரமங்கலத்தில் இருந்து செக்கானுாரணிக்கு வந்த ஆட்டோ, ரவி டூவீலர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று மாலை பலியானார். செக்கானுாரணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி