உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வியாச பவுர்ணமி பூஜை விழா

வியாச பவுர்ணமி பூஜை விழா

சோழவந்தான்: சோழவந்தான் ஒற்றை அக்ராஹாரம் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத சாஸ்திர பாடசாலையில் வியாச பவுர்ணமி பூஜை விழா நடந்தது. பாடசாலை அத்யாபகர் வரதராஜ பண்டிட் ஜி தலைமையில் வேத விற்பனர்கள், பாடசாலை மாணவர்கள் குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, புண்ணிய காவசனம், வேத வியாசர் ஆவாஹன அர்ச்சனைகள், வேத பாராயணங்கள், நாம பாராயணங்களை தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் செய்தனர். வியாச காயத்ரி ஹோமத்தை தொடர்ந்து மஹா தீபாராதனை, மந்திர புஷ்பம், சதுர்வேத பாராயணம், நாத கீத வாத்திய உபச்சாரங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி