உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பைக் - பஸ் விபத்தில் 2 பேர் பலி

பைக் - பஸ் விபத்தில் 2 பேர் பலி

பேரையூர் : மதுரை மாவட்டம், பாப்பநாயக்கன்பட்டி முனியாண்டி மகன் கார்த்திக், 22; நமச்சிவாயம் மகன் ஹேமந்தராஜ், 18; கூலி தொழிலாளிகள். இருவரும் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு டி.கல்லுப்பட்டிக்கு உணவு வாங்க டூ - வீலரில், திருமங்கலம்- - ராஜபாளையம் ரோட்டில் சோலைப்பட்டி விலக்கு அருகே சென்றனர்.அப்போது, செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ், டூ - வீலர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். டி.கல்லுப்பட்டி போலீசார், தென்காசியைச் சேர்ந்த டிரைவர் குழந்தை யேசு மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ