உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மலைக்கு திரும்பிய அழகருக்கு திருஷ்டி கழித்து வரவேற்பு

மலைக்கு திரும்பிய அழகருக்கு திருஷ்டி கழித்து வரவேற்பு

அழகர்கோவில் : மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்கிய அழகர், நேற்று காலை அழகர்கோவிலுக்கு திரும்பினார். அவரை பக்தர்கள் பூ மழை பொழிந்தும், திருஷ்டி பூசணிக்காய் சுற்றியும் வரவேற்றனர்.திருவிழாவிற்காக அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்தில் மே 10ல் அழகர்மலையில் இருந்து புறப்பட்டார். அவருக்கு மே 11ல் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. மே 12ல் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார். மே 13ல் மண்டூக முனிவருக்கு வண்டியூர் தேனுார் மண்டபத்தில் சாப விமோசனம் வழங்கினார். அன்றிரவு ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. மே 14ல் மோகினி அவதாரத்துடன் புறப்பட்ட அழகர், தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு அன்றிரவு சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை 3:30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்பட்டார்.நேற்று காலை 10:15 மணிக்கு தங்கப்பல்லக்கில் இருப்பிடம் சேர்ந்த அழகருக்கு கோயில் வண்டிப்பாதை நுழைவு வாயிலில் 'கோவிந்தா...கோவிந்தா...' கோஷம் முழங்க பூமாரி பொழிந்து பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பெண்கள் பூசணிக்காய் சுற்றி ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தனர். இன்று உற்ஸவ சாந்தியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை