உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க.,வினருக்கு முன்ஜாமின்

அ.தி.மு.க.,வினருக்கு முன்ஜாமின்

மதுரை அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் பழனிசாமி, 'மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்சி துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆக. 24 ல் அந்நிகழ்ச்சி நடந்தது. அப்பகுதியில் ஒரு மகால் அருகே ஒருவர் மயக்கமடைந்து விழுந்து கிடந்ததாக தகவல் வந்ததால் 108 ஆம்புலன்ஸ் சென்றது. அ.தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகிகள் பாலமுருகவேல், விக்கி, தீனதயாளன், பொன்காமராஜ் உட்பட சிலர் வழிமறித்து, 'இங்கு ஏன் வந்தீர்கள்' என கேள்வி எழுப்பி ஆம்புலன்ஸ் மற்றும் அதில் இருந்த ஊழியர்களை தாக்கியதாக துறையூர் போலீசார் வழக்கு பதிந்தனர். பாலமுருகவேல், விக்கி, தீனதயாளன், பொன்காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மகேந்திரன் ஆஜரானார். நீதிபதி மனுதாரர்களுக்கு இடைக்கால முன் ஜாமின் அனுமதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ