மேலும் செய்திகள்
சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ. அமைப்பாளர் நியமனம்
22-Oct-2025
மதுரை: ''சட்டசபை தேர்தல் பணிகளில் பா.ஜ.,வினருக்கு வேகம் போதாது. இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பா.ஜ., சார்பில் பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப் பாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருடன் நேற்று மாநில நிர்வாகிகள் வீடியோகான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினர். சட்டசபை தொகுதி களுக்கான குழுக்கள் பூத்லெவல் ஏஜென்ட்கள் 1, 2 ஐ கொண்ட புதிய குழுக்களை, அந்தந்த பகுதி மண்டல் நிர்வாகிகளுடன் அமைத்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர். கேசவ விநாயகம் பேசுகையில், ''தி.மு.க.,வினர் களத்தில் இறங்கி விட்டனர். உங்களிடம் சுணக்கம் உள்ளது. தினமும் தொகுதி குழுக்கள் கூடி பேச வேண்டும். வீடியோகான்பரன்சிங் ஆலோசனை நடக்கும்போது அனைவரும் இணைப்பில் இருக்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் முதல்வர் ஸ்டாலின் தொகுதியிலேயே 19 ஆயிரம் வாக்காளர்கள் போலியாக உள்ளதாக மத்திய அமைச்சரே தெரிவித்துள்ளார். இதேபோல எல்லா தொகுதிகளிலும் தி.மு.க.,வினர் சேர்த்த போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க வேண்டும். ஓட்டுச்சாவடி ஏஜென்ட்களில் சிலர் கூலி வேலைக்கு செல்வோராக இருக்கலாம். அதுபோன்றவர்களுக்கு தொகுதி குழுவினர் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும்,'' என்றார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். நம் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நேரத்தில் யாருக்கு வேண்டுமானாலும் சீட் கிடைக்கலாம். அதற்கு தகுந்த வேகத்தில் பணியாற்றாதது வேதனையாக இருக்கிறது. இந்த வேகத்தை அதிகரிக்க வேண்டும். நீங்கள் முழுநேரமும் இயங்க வேண்டும். தேசிய அமைப்பாளர் சந்தோஷ் பேசிய போது, தமிழகத்தில் பணிகள் தொய்வாக இருப்பதாகவும், நிர்வாகிகளின் வேகம் பத்தாது எனவும் வருத்தப்பட்டார். எனவே வேகமாக பணியாற்றுங்கள் என்றார்.
22-Oct-2025