மேலும் செய்திகள்
சேலத்தில் 76 போலீசாருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
28-Nov-2024
பேரையூர்; பேரையூர் தாலுகா லட்சுமிபுரம் சிவபெருமாள் மனைவி ஜானகி. இவர் டிகிரி முடித்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த குமரேசன், சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை பார்ப்பதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் ஜானகிக்கு மருத்துவத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார். ஜானகி குடும்பத்தினர் தொடர்ச்சியாக குமரேசனிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவ காப்பாளர் பணி நியமன ஆணையை குமரேசன் கொடுத்துள்ளார். போலி நியமன ஆணை என அறிந்த ஜானகி , பேரையூர் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
28-Nov-2024