பாராட்டு சான்றிதழ்
மதுரை: மதுரை காந்தி மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸின் 25 ஆண்டு கால காந்திய கல்விப்பணியை பாராட்டும் வகையில் சென்னை காந்தி மண்டபத்தில் நடந்த விழாவில் கவர்னர் ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மதுரை சிறை கைதிகளுக்கு காந்திய வகுப்பு நடத்தியது, எண்பதுக்கும் மேற்பட்ட காந்திய நுால்களை மதிப்பாய்வு செய்தது, காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் 15 கல்லுாரிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது போன்ற பணிகளுக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது.