உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீப மண்டபத்தில் துாய்மைப்பணிகள்

தீப மண்டபத்தில் துாய்மைப்பணிகள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் மண்டபம், உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் சுண்ணாம்பு, காவி நிறம் அடிக்கும் பணி துவங்கியது.மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் தாமிர கொப்பரை வைத்து டிச. 13ல் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். அதற்காக அம்மண்டபங்கள் துாய்மைப்படுத்தப்பட்டு தற்போது வெள்ளை அடிக்கப்படுகிறது. அப்பணி நிறைவடைந்ததும் மண்டபத்தைச் சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படும். மலை அடிவாரத்திலிருந்து உச்சிப்பிள்ளையார் மண்டபம் வரை உள்ள செடி கொடிகள் அகற்றப்பட்டு சுண்ணாம்பு, காவி நிறம் அடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை