உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கும்பாபிஷேகம் /

கும்பாபிஷேகம் /

திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உச்சபட்டி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் 3ம் ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று கால யாக சாலை பூஜைகளுக்கு பின்னர் நேற்று காலை 9:45 மணிக்கு கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு வருடாபிஷேகம் நடந்தது.புதிதாக அமைக்கப்பட்ட 18-ம் படி கருப்பசாமி சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை உச்சபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை