உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறையில் ஊழல் புகார்: எஸ்.பி., உட்பட 11 பேர் மீது வழக்கு

சிறையில் ஊழல் புகார்: எஸ்.பி., உட்பட 11 பேர் மீது வழக்கு

மதுரை:மதுரை மத்திய சிறையில் கைதிகளை கொண்டு மருத்துவ பேண்டேஜ், ஆபீஸ் கவர்கள் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2016 முதல் 2021 வரை கண்காணிப்பாளராக ஊர்மிளா இருந்தார். தற்போது இவர் கடலுார் சிறை கண்காணிப்பாளராக உள்ளார்.இவரது பணிக்காலத்தில் 2019 முதல் 2021 வரை உற்பத்திக்கான மூலப்பொருட்களை சென்னை வெங்கடேஸ்வரா டிரேடிங், எஸ்.எஸ். டிரேடர்ஸ், சாந்தி டிரேடர்ஸ், ஜெனரல் டிரேடிங் நிறுவனம், தனலட்சுமி என்டர்பிரைசஸ், ஜே.கே.வர்த்தகர்கள் மூலம் பெறப்பட்டன.இதில் சில நிறுவனங்கள், பொருட்களை வழங்கியது போல, போலியாக பில்கள் தயாரித்து சிறை நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளன. இதன்மூலம், 1.63 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடக்கிறது. நாளை விசாரணை நடக்கும் நிலையில் ஊர்மிளா உட்பட 11 பேர் மீது, மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை