உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வாடிக்கையாளர் உண்மை சரிபார்ப்புக்கு அவகாசம் நீட்டிப்பு

 வாடிக்கையாளர் உண்மை சரிபார்ப்புக்கு அவகாசம் நீட்டிப்பு

சென்னை: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகின்றன. இந்த சிலிண்டரை வாடிக்கையாளர்கள் வாங்கியதும், வங்கி கணக்கில் மத்திய அரசின் மானிய தொகை செலுத்தப்படுகிறது. இதற்காக, வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்கும் பணி நடக்கிறது. எனவே, சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர், காஸ் ஏஜன்சிக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்தோ அல்லது எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் போன் செயலி வாயிலாகவோ உண்மை சரிபார்ப்பு பணியை முடிக்கலாம். இந்த பணியை முடிக்க, செப்.7 வரை அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினத்துடன் அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் செப்.15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 2.40 கோடி வாடிக்கையாளர்களில், 94 சதவீதம் பேர் உண்மை சரிபார்ப்பு பணியை முடித்துள்ள நிலையில், 6 சதவீதம் பேர் முடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Jayaraman
செப் 09, 2026 06:01

விரல் ரேகையை, பதிவு செய்தவர்களுக்கு , விரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது , என்ற செய்தியை, மொபைல் போன் வழியாக தெரிவியுங்கள். விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு, விரல் ரேகையை பதிவு செய்யுங்கள் , என்ற செய்தியை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன் கூடவே கடைசி தேதியையும் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். வரும்போது என்ன கொண்டு வர வேண்டுமோ அதனையும் தெரிவியுங்கள். நன்றி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை