மூடுபனியால் பயிர்கள் பாதிப்பு
பேரையூர்: பேரையூர் பகுதியில் சில நாட்களாக அதிகாலையில் பொழியும் பனியால் பயிர்கள் பாதிப்படைகின்றன.செப்டம்பரில் விதைத்த மொச்சை, மிளகாய் பயிர் பூத்து, காய்த்து தற்போது மகசூல் கொடுக்கும் நிலையை எட்டி உள்ளது. பனிப்பொழிவால் பூக்கள் பிஞ்சுகளாக மாறாமல் வெம்பி உதிர்கின்றன. காய்களின் எண்ணிக்கை குறைகிறது. பல ஆயிரம் செலவு செய்து சாகுபடி செய்த நிலையில் மகசூல் நேரத்தில் பனிமூட்டத்தால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.