மின் கம்பியால் அபாயம்
திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியம் ராயப்பாளையத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் இருந்து சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. ஒருவர் நின்றவாறு கையை உயர்த்தினாலே மின் கம்பியில் உரசும் அளவுக்கு கம்பி தொங்குகிறது. இதனால் விபத்து அபாயம் அதிகம் உள்ளது. ஏதேனும் விபரீதம் நடக்கும் முன்னர் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.