மேலும் செய்திகள்
தாமதமாகும் திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் திறப்பு
03-Sep-2025
மதுரை : மதுரை, விருதுநகர் மாவட்ட கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் உதயநிதி இன்று (செப்.22) இரவு விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து விருதுநகர் செல்லும் அவர் இரவு அங்கு தங்குகிறார். நாளை (செப்.,23) விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மதுரை திரும்புகிறார். வழியில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் சில இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். இரவு அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்குகிறார். செப்.,24ல் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பின் வாடிப்பட்டி, திருமங்கலம் தொகுதிகளில் நடக்கும் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கிறார். மேலுார் சட்டசபை பகுதியில் சில பகுதியில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு அன்று இரவு சென்னை திரும்புகிறார். காஞ்சிபுரத்தில் அவர் முதற்கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை ஏற்கனவே துவக்கினார். இரண்டாம் கட்டமாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அவர் பிரசார பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மதுரை நிகழ்வின் போது கலைஞர் நுாற்றாண்டு நினைவு நுாலகம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்கிறார். இதுகுறித்த கடைசி நேரத் தகவலால் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு பணிகளை மாநகராட்சி வேகப்படுத்தியுள்ளது. ஓராண்டுக்கு முன் இப்பஸ் ஸ்டாண்டில் உதயநிதி ஆய்வு செய்தபோது பராமரிப்பு பணிகளில் அதிருப்தியடைந்தது குறிப்பிடத்தக்கது. துணைமுதல்வர் பிரசார திட்டம் குறித்த முழு விவரம் இன்று (செப்.,22) வெளியாகும் என தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
03-Sep-2025