மேலும் செய்திகள்
பரவையில் அக்.,14ல் கொடியேற்றம்
12-Oct-2025
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இக்கோயில் விழா அக்.14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வழிபட்டனர். நேற்று காலை வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று கருப்பண்ணசாமி கோயிலில் பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. அக்.24ல் பெருமாள் கோயிலில் பொங்கல் விழா, 25ல் மாலை 3:00 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி நகர் வலம் வருதல் நடைபெறும்.
12-Oct-2025