உபகரணங்கள் வழங்கல்
பெருங்குடி: பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, உன்னத் பாரத் அபியான், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் சார்பில் சர்வதேச பெண்கள் தினம் மற்றும் நிலையான வளர்ச்சிகள் வாரம் கொண்டாடப்பட்டது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். நிலையான வளர்ச்சிக்கு பெண்களின் ஆளுமை தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. பெருங்குடி, வலையங்குளம் துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள், சாலையோர பெண் வியாபாரிகளுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது. என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார், தமீம் அசாருதீன், மாணவ பிரதிநிதிகள் வசந்த், ஜீவா, அலுவலக பணியாளர் பிரசாந்த் ஒருங்கிணைத்தனர்.