உரக்கூடம் சாம்பல்
திருமங்கலம்: கள்ளிக்குடி ஒன்றியம் டி. கொக்குளம் ஊராட்சியில் சுடுகாடு அருகே ஊராட்சி சார்பில் மண்புழு உரக்கூடம் செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர், இந்த உரக்கூடத்திற்கு தீ வைத்துச் சென்றனர். உரக்கூடம் முற்றிலும் எரிந்து சேதமானது. ஊராட்சி செயலாளர் பால்சாமி புகாரில் கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.