ஊராட்சியில் கள ஆய்வு
கொட்டாம்பட்டி: அய்யாபட்டி ஊராட்சி ஓட்டகோவில்பட்டி ஜாபர் அலி. இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அய்யாபட்டி ஊராட்சியில் கள ஆய்வு செய்ய அனுமதி கேட்டிருந்தார். மேல்முறையீட்டு அலுவலர் செல்ல பாண்டியன் அனுமதி அளிக்கவே ஊராட்சியில் கள ஆய்வில் ஈடுபட்டார். ஆய்வின் போது வங்கி வரவு செலவு கணக்குகளை முழுமையாக தராததால் தகவல் ஆணையத்தில் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.