உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலை வழக்கில் ஐவருக்கு ஆயுள்

கொலை வழக்கில் ஐவருக்கு ஆயுள்

மதுரை: மதுரை கல்மேடு களஞ்சியத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இட்லி கடை நடத்தினார். இவருக்கும் அதே பகுதி மணிமாறனுக்கும் 33, முன்விரோதம் இருந்தது. அவரை பாலசுப்பிரமணி தாக்கினார்.இந்த ஆத்திரத்தில் 2016 டிச.4ல் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து, தடுக்க வந்த அவரது மனைவிக்கு காயம் ஏற்படுத்தியதாக மணிமாறன் அவரது கூட்டாளிகள் ஆசாரி மணிகண்டன் 27, புல்லட் மணி 37, சரவணன் 41, அஜித்குமார் 27, மீது சிலைமான் போலீசார் வழக்குப் பதிந்தனர். மதுரை மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.நீதிபதி நாகராஜன்: மணிமாறன் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை