திரைப்படத்தில் அவதுாறு ஐகோர்ட் கிளை தள்ளுபடி
மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு முன், வழக்க-றிஞர் ஒருவர் ஆஜராகி முறையிட்டதாவது:'சொர்க்கவாசல்' என்ற திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதுாறான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. எனவே, படத்தின் இயக்குனர், நடிகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தர-விடும் வகையில் தாக்கல் செய்யப்படும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். நீதிபதிகள்: இது ஏற்புடையதல்ல. சென்னை உயர் நீதிமன்ற அமர்வை அணுகலாம். இவ்வாறு தெரிவித்தனர்.