மேலும் செய்திகள்
கிடாமுட்டு போட்டி உயர்நீதிமன்றம் உத்தரவு
23-Apr-2025
மதுரை : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் மணிகண்டவாசன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:ஆவியூரில் வடமாடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி காரியாபட்டி தாசில்தாரிடம் மனு அளித்தோம். நிராகரித்தார். அதை ரத்து செய்து அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: வடமாடு ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்ட தேதி ஏற்கனவே முடிந்துவிட்டது. சட்டப்படி கால்நடைத்துறை செயலருக்கு ஆன்லைன் மூலம் புதிதாக மனு அளிக்கலாம் என தெரிவித்தது.நீதிபதிகள்: மனுதாரர் கால்நடைத்துறை செயலருக்கு மனு அளிக்கலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.
23-Apr-2025