உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டூவீலர் - லாரி மோதிய விபத்தில் விரிவுரையாளர் பலி

டூவீலர் - லாரி மோதிய விபத்தில் விரிவுரையாளர் பலி

உசிலம்பட்டி,:கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தவர் உசிலம்பட்டி மாருதிநகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் 39. நேற்று இவர் கல்லூரி பணி முடித்து மாலை டூவீலரில் உசிலம்பட்டி திரும்பினார். 6:30 மணியளவில் திருமங்கலம் விலக்கு அருகே எதிரே நாய் குறுக்கிட்டதால் சற்று நிலை தடுமாறியவரை பின்னால் சென்ற லாரி மோதியதில் காயமடைந்து பலியானார். இந்த விபத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப், கார் சேதமடைந்தன. உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை