உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெள்ள நிவாரணம் வழங்க சென்ற போது மதுரை பொறியாளர் பலி;

வெள்ள நிவாரணம் வழங்க சென்ற போது மதுரை பொறியாளர் பலி;

மதுரை: மதுரை விளாச்சேரி ரமேஷ்பாபு 55. இவர் மாநகராட்சி மண்டலம் 3 பொறியாளராக பணிபுரிந்தார்.நேற்று விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்க டிப்பர் லாரியில் சென்றார். நேற்றிரவு 7:00 மணியளவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்பன் கோயில் அருகே டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி டிவைடரில் மோதி கவிழ்ந்தது. காயம் அடைந்த ரமேஷ்பாபு சம்பவயிடத்திலேயே இறந்தார். டிரைவர் கற்பகராஜா 33, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை