உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டி.என்.பி.எஸ்.சி., தேர்வு31 ஆயிரம் பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு31 ஆயிரம் பேர் பங்கேற்பு

மதுரை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று குரூப்-2 தேர்வு நடந்தது. மதுரை நகரில் 79 மையங்கள், மாவட்ட அளவில் 20 என 99 மையங்களில் நடந்த தேர்வில், 30 ஆயிரத்து 966 பேர் எழுதினர். சார்பதிவாளர், சார்நிலை கருவூல அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறைகளில் உதவியாளர் உட்பட பல்வேறு வகையான பணியிடங்களுக்கான இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. டி.ஆர்.ஓ.,முருகேஷ், அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் சேவியர் ஏசுராஜா, ராஜா ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர். இத்தேர்வையொட்டி 21 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை