உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாமத்துவாரில் விழா

நாமத்துவாரில் விழா

மதுரை : மதுரை அய்யர்பங்களா, இ.பி.,காலனியில் உள்ள நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் மகாரண்யம் முரளிதர சுவாமிஜியின் திரு நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று (அக்.,16) முதல் அக்., 20 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. தினமும் மாலை 4:00 மணிக்கு மகா மந்திர கீர்த்தனம், மாலை 6:00 மணிக்கு பஜனை, இரவு 7:00 மணிக்கு சொற்பொழிவு, 8:00 மணிக்கு பாதுகை புறப்பாடு, இரவு 8:30 மணிக்கு அன்னதானம் நடக்கின்றன. தினமும் ஒரு முதியோர் இல்லத்திற்கு புத்தாடைகள், அன்னதானம் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை நிர்வாகி ஹரிதாஸ் தலைமையில் பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை