உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

குண்டும் குழியுமான ரோடுகள்மதுரை சூர்யா நகரில் மீனாட்சி நகர் வடக்கு 8வது தெருவில் டூவீலரில் பயணிக்க முடியாத அளவிற்கு ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன. மழை நேரங்களில் இன்னும் மோசம். மாநகராட்சி சரிசெய்ய வேண்டும்.- எழில், சூர்யாநகர்துர்நாற்றம் தாங்க முடியலமதுரை எஸ்.எஸ்.காலனி ஜவகர் முதல் தெருவில் அடிக்கடி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரகு, எஸ்.எஸ்.காலனிஆபத்தான ரோடுகள்மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமி நகர் நுழைவு பகுதியிலிருந்து ரோடுமோசமான நிலையில் உள்ளன. குடிநீருக்காக தோண்டப்பட்ட குழிகளும் மூடப்படாததால் டூவீலரில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பத்மநாபன், துரைசாமிநகர்தேங்கும் கழிவு நீர்மதுரை உலக தமிழ்ச்சங்கம் முன்பு உள்ள கால்வாயில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு உண்டாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.விமல், கே.கே.நகர்பாதுகாப்பில்லாத சிக்னல் பகுதிமதுரை பைபாஸ் ரோடு செங்கோல் நகர் சிக்னல் சந்திப்பில் பெரும்பாலும் போக்குவரத்து காவலர்கள் பணியில் இருப்பதில்லை. சிக்னலும் இயங்காததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். போலீஸ் கமிஷனர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மனோகரன், ஆரப்பாளையம்பஸ் வசதி வேண்டும்மதுரை செல்லுார் 60 அடி ரோட்டில் இருந்து பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணிக்கு பஸ், மினி பஸ் வசதி இல்லை. போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நடராஜன், செல்லுார்வாகன ஆக்கிரமிப்புஅலங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிடம் முன்பு வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரத்தினம், அலங்காநல்லுார்அள்ளப்படாத குப்பைமதுரை அழகப்பன் நகர் குடியிருப்போர் நலச்சங்க விளையாட்டு மைதானம் முன்பு பல நாட்களாக குப்பை அள்ளாமல் இருக்கின்றது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாலா, டி.வி.எஸ். நகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ