உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

தேங்கும் மழைநீர் மதுரை செல்லுார் காளியம்மன் கோவில் தெருவில் மழைநீர் ரோட்டில் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் பாதிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகேசன், செல்லுார் குண்டு, குழி ரோடு மதுரை பசுமலை வசந்தம் கார்டன் பகுதியில் குண்டும், குழியுமாக ரோடு உள்ளது. தெருவிளக்கும் எரிவதில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - உமா, பசுமலை அள்ளப்படாத குப்பை மதுரை நியூ எச்.ஐ.ஜி., நகர் காலனியில் நான்கு ஆண்டுகளாக ரோட்டின் குப்பை அள்ளப்படாமல் உள்ளது. பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - ரமேஷ், கே.கே.நகர் சாக்கடை அடைப்பு மதுரை எல்லீஸ் நகர் கருமாரி அம்மன் கோயில் பகுதியில் அடிக்கடி சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வீட்டுக்குள் கழிவுநீர் வருகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் அமைத்த குழாய்கள் பழுதடைந்து விட்டன. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பத்மநாபன், எல்லீஸ் நகர் மோசமான ரோடு மதுரை முத்துப்பட்டி - அவனியாபுரம் ரோடு பழுதடைந்து மோசமாகி விட்டது. பள்ளி மாணவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆறுமுகம், முத்துப்பட்டி குடிநீர் பிரச்னை மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் திருநாவுக்கரசர் தெருவில் குடிநீர் சரிவர வருவதில்லை. எப்போதாவது வரும் நீரிலும் சேறு கலந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பரதன், நேரு நகர் கழிவறையா, நரகமா மதுரை மாட்டுத்தாவணி பொதுமக்கள் கழிவறை படுமோசமாக உள்ளது. கழிவறையா இல்லை நரகமா என்றே தெரியாத அளவுக்கு மோசமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜாராம், பொதிகை நகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ