உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அவனியாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

அவனியாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட 64 அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்து, 59 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணைகள் வழங்கினார்.கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், மண்டல தலைவர் சுவிதா, உதவி கமிஷனர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் செல்வ விநாயகம் பங்கேற்றனர். தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடியிருப்பும் 334 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. ஒரு குடியிருப்பின் மதிப்பீடு ரூ. 11.44 லட்சம். அதில் பயனாளி பங்கு தொகை ரூ. ஒரு லட்சம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ