பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, அன்னை செவிலியர் கல்லுாரி மாணவர்கள் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். நகராட்சி துணைத்தலைவர் தேன்மொழி, கமிஷனர் இளவரசன், விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து துணிப்பைகள், பாத்திரங்களில் பொருட்கள் வாங்க வலியுறுத்தினர்.