உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அஜித்குமார் கொலை போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

அஜித்குமார் கொலை போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

மதுரை : சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரிலிருந்த நகை திருடுபோனது. கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27 ல் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் கைதாகினர். சி.பி.ஐ.,போலீசார் விசாரிக்கின்றனர். கண்ணன் உட்பட 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க மதுரை (சி.ஜெ.எம்.,) நீதிமன்றத்தில் சி.பி.ஐ.,தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதித்தது. விசாரணை முடிந்து நேற்று 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி செல்வபாண்டி ஆக.,13 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ