உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

அவனியாபுரம்: அவனியாபுரம் அழகு முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு கரகம் எடுத்தல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், குழந்தையை கரும்பு தொட்டிலில் எடுத்துச் சென்றும், அலகு குத்தி தீ மிதித்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று மாவிளக்கு வைத்தல், விளக்கு பூஜை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை முளைப்பாரி ஊர்வலம், அம்மனுக்கு கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ