உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏர்போர்ட்டில் ரூ.3 கோடி கஞ்சா சிக்கியது

ஏர்போர்ட்டில் ரூ.3 கோடி கஞ்சா சிக்கியது

அவனியாபுரம்: தாய்லாந்தில் இருந்து இலங்கை சென்று, அங்கிருந்து மதுரை வரும் விமானத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த விமானத்தில் வந்த பயணியரின் உடைமைகளை நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர்.ஒரு பயணி கொண்டு வந்த பெட்டியில், 3 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு, 3 கோடி ரூபாய். கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர், கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை