உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  திருப்பரங்குன்றத்து கோயிலில் ரூ.61 லட்சம் உண்டியல் காணிக்கை

 திருப்பரங்குன்றத்து கோயிலில் ரூ.61 லட்சம் உண்டியல் காணிக்கை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் நேற்று அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி கமிஷனர் இளங்கோவன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. 61,28,695. தங்கம் 111 கிராம், வெள்ளி 3136 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலய வேதபாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பேரவையினர், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ