உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாடுவது சாலச்சிறந்தது சாலமன் பாப்பையா கருத்து

கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாடுவது சாலச்சிறந்தது சாலமன் பாப்பையா கருத்து

மதுரை: ''தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வாங்கித்தந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை 'செம்மொழி தினமாக' கொண் டாடுவது சாலச்சிறந்தது,'' என, மதுரையில் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தெரிவித்தார்.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்காக நேற்று முன்தினம் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மதுரை மாநகராட்சி முதல் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார். நேற்று சாலமன் பாப்பையா மேயர் முத்துவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின் அவர் கூறியதாவது: முன்னாள் மேயர் முத்து தமிழகத்தின் பொது சொத்து. அவர் 4 ஆண்டுகள் பணிபுரிந்த மதுரா கோட்ஸ் ஆலை முன் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது பெருமைக்குரியது.திராவிட இயக்கம் வளர்ந்ததற்கு காரணமானவர்களில் ஒருவர். முன்னாள் முதல்வர்கள் அண்ணாத்துரை, கருணாநிதி கூட அவரது பேச்சை ரசித்து கேட்பார்கள். பகுத்தறிவாளரான அவரை ஓர் இனத்திற்கு உட்பட்டவராக பார்க்க முடியாது.தமிழர்களின் உரிமைகளை, மொழியை நிலை நாட்டிய அண்ணாத்துறை, கருணாநிதியைப் போல செயல்படும் முதல்வர் ஸ்டாலின் மீது அபிமானம் இருந்தாலும் நான் அரசியல்வாதி இல்லை. புதுஜெயில் ரோட்டிற்கு 'முதல் மேயர் முத்து சாலை' என்று பெயர் சூட்ட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வாங்கித்தந்த கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஐ செம்மொழி தினமாக கொண்டாடுவது சாலச்சிறந்தது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
ஜூன் 02, 2025 11:26

பெறுநர்: ஆணையர், திருமங்கலம் நகராட்சித் துறை, மதுரை மாவட்டம், தமிழ்நாடு. மதிப்புக்குரிய ஐயா / அம்மையாருக்கு, மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியின் கர்பகனா பகுதியிலிருந்து ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல குறையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இணைதெரியதொரு நடவடிக்கையாக, நகராட்சி அதிகாரிகள் அல்லது அவர்கள் ஒப்பந்ததாரர்கள், ராயலசீமா பட்டியில் உள்ள ரயில்வே ப்ளாக் உற்பத்தி ஆலைக்குச் சொந்தமான கட்டுமான கழிவுகளை நகரின் முக்கிய சாலைகளில் பரப்பி வருகின்றனர். இந்த கழிவுகள் முறையாக சீரமைக்கப்படாமல் அல்லது சாலைக்கான தரநிலைகளுக்கு ஏற்ப தயார் செய்யப்படாமல் இருப்பதால், வாகனங்கள் செல்வதன் மூலம் மிகவும் அதிக அளவில் தூசி மாசு ஏற்படுகிறது. முக்கிய கவலைகள்: • உடல்நல பாதிப்பு: தூசியின் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுகாதார சிக்கல்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஏற்படுகின்றன. • வியாபார மீதான தாக்கம்: சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள், பொருட்களில் தூசி அடித்துவிடுகிறது. • சுற்றுச்சூழல் பாதிப்பு: நீண்ட காலமாக தூசி மாசு நிலவுவதால் மண் மற்றும் காற்று தரம் பாதிக்கப்படும். • பொது அறிவிப்பின்றி நடவடிக்கை: இப்பகுதியில் மக்கள் அறிவிப்பு இன்றி மற்றும் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, நகராட்சி மேலாண்மையில் தவறான முன்மாதிரி anti-pattern ஆகும். இது பாதுகாப்பான, சுறுசுறுப்பான மற்றும் பொதுமக்கள் நலனுக்கு அமைவான திட்டமிடல் நடைமுறைக்கு எதிரானது. எங்களது கோரிக்கைகள்: 1. சாலைகளில் கையாளப்படுகிற கட்டுமான கழிவுகளின் உரிய பரிசோதனை மற்றும் உடனடி நிறுத்தம். 2. தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், போதிய நீர் தெளிப்பு அல்லது மற்ற முறைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 3. பயன்படுத்தப்படும் பொருட்களின் மூலம் மற்றும் தகுதியை உறுதி செய்யும் சோதனை. 4. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கண்காணிப்பு முறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 5. மேற்கொள்ளப்பட உள்ள திருத்த நடவடிக்கைகள் மற்றும் காலக்கெடு தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை உங்கள் அலுவலகம் உரிய முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொண்டு, பொது நலனுக்காக விரைந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.


முக்கிய வீடியோ