உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாலையில் குவியும் கிரஷர் துாசியால் அவதி

சாலையில் குவியும் கிரஷர் துாசியால் அவதி

வாடிப்பட்டி, : வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் குவிந்து கிடக்கும் கிரஷர் துரசிகளால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இங்குள்ள கச்சைக்கட்டி ரோட்டில் 10க்கும் மேற்பட்ட கிரஷர்கள் செயல்படுகின்றன. இங்கு பெயரளவில்தான் விதிகள் பின்பற்றப்படுகிறது.இதனால் கல் உடைக்கும் போது வெளிப்படும் துாசி ரோட்டை மறைக்கும் அளவு பரவுகின்றன. டூவீலரில் செல்வோருக்கு 'டஸ்ட் அலர்ஜி' மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. இங்குள்ள கிரஷர்களில் இருந்து ஜல்லி, எம்.சாண்ட், துாசிகளை தினமும் லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது சிதறும் மண் துாசி கச்சைக்கட்டி பிரிவு - மதுரை நான்கு வழிச்சாலையில் 50 மீ., துாரத்திகு சாலையின் நடுப்பகுதி வரை குவிந்துள்ளது. டூ வீலரில் செல்பவர்கள் குறிப்பாக இரவில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கிரஷர் துாசியை கட்டுபடுத்தவும், மண் குவியலை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை