தந்தையை கொலை செய்த மகன்; போலீசில் சரண்
மதுரை: மதுரை மாவட்டம் வில்லாபுரம் அடுத்த கற்பகநகரில் வசித்து வருபவர் லோகநாதன். இவரது மகன் கார்த்திக். இவர், தீபாவளி சீட்டு பிடித்து, அதிலிருந்து கிடைத்த ரூ.3 லட்சத்தை தந்தையிடம் கொடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்றிரவு (அக்.,15) அந்த பணத்தை திரும்பி கேட்கும்போது மகன் - தந்தை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தந்தை லோகநாதனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில், கார்த்திக் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.